Sunday, April 26, 2009

இன்றைய நிகழ்வும் சிந்தனையும்!

சரியாக மாலை 6 மணி இருக்கும், நானும் என்னுடைய நண்பனும் ஒரு PUB இலிருந்து வெளியேறியிருந்தோம். நான் இரண்டே இரண்டு Beer மட்டும் குடித்திருந்தேன், என் நண்பனோ வெறும் Lime Juice மட்டுமே. எனவே, எனக்கும் அவ்வளவாக போதை கிடையாது, என் நண்பனுக்கோ முற்றாக போதை கிடையாது.
.
சாலையின் வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். ஒரு அழகிய இளம் பெண் எங்களை கடந்து சென்று, சற்று முன் புறம் காணப்படும் பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்தாள். என் நண்பனோ அவளை கண்டதும் கலங்கி விட்டான் போலும். சுமாரான Figure தான். அவ்வளவு ஒன்றும் பேரழகி இல்லை. இருந்தாலும் என் நண்பன் இருக்கிறானே, கொஞ்சம் ஒரு பெண்ணை கண்டால் உடனே ஏதோ உலக அழகி ஐஸ்வர்யாவையே (எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு பெண்) கண்டதை போல திக்குமுக்காடி போவான்.
.
சரி, விஷயத்துக்கு வருவோம். உடனே என்னிடம் "டேய் மச்சான் செம பிகருடா, பேசலாமா?" என்று கேட்கும் போதே, இது நான் எதிர் பார்த்த விஷயம் தாண்டா என்பதை போல ஒரு look விட்டேன். அதிரிச்சி என்னவென்றால், அவன் பேச முன்னரே அவளாகவே வந்து, "whats the time now?" என்று கேட்டாள். நான் கொஞ்சம் ஒதுங்கியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன பேசினானோ தெரியல, ஒரு 5 நிமிஷம் இருக்கும், அவளுடைய மொபைல் நம்பர் கூட இப்ப அவன் கைவசம் இருக்கின்றது. ஆண்டவா, பெண்களை நம்பாதே. திரும்பி நடக்க தொடங்கினோம், கொஞ்சம் தூரம் வந்ததும், திரும்பி பார்த்தேன், ஒரு motor bike இல் நல்ல வாட்ட சாட்டமான ஒருவன் அவளை pick up பண்ணிக்கொண்டிருந்தான் (அட, bike ல தானுங்க). என்ன கொடுமை சார் இது? Boyfriend ஆ இல்ல என்னோட friend போல எவனாச்சும் ஒருத்தனா?
.
ஷொட்டு : இதை வாசிக்கும் பெண் நண்பிகளே.. தயவு செய்து என் மேல கோவப்பட வேணாமுங்க.. எல்லா பெண்களும் இப்படி இல்லை, அதே நேரம் என் நண்பனை போல சில ஆண்கள் இருக்கும் வரையில், இப்படிப்பட்ட பெண்கள் இருக்கத்தானே செய்வாங்க!

add to del.icio.us saved by 0 users

Saturday, April 25, 2009

என் எண்ணங்கள் பற்றி..

நாம் இந்த உலகில் பிறப்பதற்கு எங்கே நிபந்தனைகள் பிறந்தனவோ.. அங்கேயே என் பதிவுகளும் பிறந்தன.. சிந்திப்பதற்கு கோடி விடயங்கள் இருப்பினும் நான் இங்கே எழுதப்போவது யாவும், நான் சிந்தித்த சில விடயங்களை மாத்திரமே.. என்னுள் கேட்கப்படும் எத்தனையோ கேள்விகளுக்கு நான் விடையற்று தவித்திருக்கின்றேன்.. கோடி பந்திகள் எழுதியும் புரிய வைக்க முடியாத என் எண்ணங்கள்.. இதோ வந்துவிட்டேன்.. உங்களிடம் கூற.. முடிந்தால் பதில் கூறுங்கள்.. இல்லாவிட்டால் கேள்விகளையே மீண்டும் கேளுங்கள். .
- ராம்ராவணா

add to del.icio.us saved by 0 users