நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் எழுதுகின்றேன். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்பது தான் என் ஆசை. அனால் கடந்த சில நாட்களாக எனக்கு காய்ச்சல். உடல் சோர்வின் காரணமாக கணனியிடம் வரவேயில்லை.
.
சரி, இன்று ஒரு விஷயமாக எனது சிந்தனை திரும்பியிருக்கிறது. பல்லி விழும் பலன் பற்றி உங்கள் கருது என்ன?
சரி, இன்று ஒரு விஷயமாக எனது சிந்தனை திரும்பியிருக்கிறது. பல்லி விழும் பலன் பற்றி உங்கள் கருது என்ன?
.
இதை நான் ஏன் கேட்கின்றேன் என்றால், மூன்று நாட்களுக்கு முன், எனக்கு காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது. எனவே சோர்வை சற்றே நீக்கிக்கொள்ள, வாசல் கதவை திறந்து வெளியே செல்ல ஆசைப்பட்டேன். கதவை திறந்தது தான் தாமதம், கதவில் ஒட்டிக்கொண்டிருந்த சினஞ்சிரிய பல்லி ஒன்று எந்தன் இடது கை மணிக்கட்டில் விழுந்தது. பள்ளி விழுந்தால் சரியில்லை என்பார்களே, சரி டக்கென்று ஓடிப்போய் பஞ்சாங்கத்தை புரட்டிப்பார்த்தேன், இடது கை மணிக்கட்டில் பள்ளி விழுந்தால், கீர்த்தி என்றும், இடது கையில் விழுந்தால் மரணம் என்றும் காணப்பட்டது.
இதை நான் ஏன் கேட்கின்றேன் என்றால், மூன்று நாட்களுக்கு முன், எனக்கு காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது. எனவே சோர்வை சற்றே நீக்கிக்கொள்ள, வாசல் கதவை திறந்து வெளியே செல்ல ஆசைப்பட்டேன். கதவை திறந்தது தான் தாமதம், கதவில் ஒட்டிக்கொண்டிருந்த சினஞ்சிரிய பல்லி ஒன்று எந்தன் இடது கை மணிக்கட்டில் விழுந்தது. பள்ளி விழுந்தால் சரியில்லை என்பார்களே, சரி டக்கென்று ஓடிப்போய் பஞ்சாங்கத்தை புரட்டிப்பார்த்தேன், இடது கை மணிக்கட்டில் பள்ளி விழுந்தால், கீர்த்தி என்றும், இடது கையில் விழுந்தால் மரணம் என்றும் காணப்பட்டது.
.
கீர்த்தி என்று இருந்ததால் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு, வெளியே சென்று வாசல் முற்புறத்தில் அமர்ந்தேன். எனது செல்பேசியை கையில் வைதிருந்தபடியே நோட்டம் விட்டுக்கொண்டிருண்டேன்.
கீர்த்தி என்று இருந்ததால் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு, வெளியே சென்று வாசல் முற்புறத்தில் அமர்ந்தேன். எனது செல்பேசியை கையில் வைதிருந்தபடியே நோட்டம் விட்டுக்கொண்டிருண்டேன்.
.
பக்கத்து தெரு, வீட்டு முற்றத்தில் ரோஜாச்செடி , இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் துளசிச்செடி, அடுத்த வீட்டு சிறுமியின் குறும்பு, மாமரத்தில் அழகாய் உட்கார்ந்திருக்கும் ஏதோ ஒரு குருவி, காகம் கரையும் சத்தம், தூரத்தில் பஸ் ஹோர்ன், சாலை வழியே சண்டை போட்ட படி நடந்து செல்லும் ஒரு தந்தையும் மகனும், ஓரப்பார்வை பார்த்த படி சென்ற யாரோ ஒருத்தி, அவள் நடை, மோட்டார் பைக் சக்கரங்களுக்கு குறைக்கும் தெரு நாய், வானம், அக்கினி நட்சத்திர வெயில், சூரியனை சுற்றி எத்தனையோ கோள்கள், அதில் எமது கோளில் மட்டும் மனிதம் என்ற ஒன்று, எவ்வளவு பெரிய விஷயம் இது ஒரு மகத்தான யுகம் எங்கள் கோளுக்கு மட்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டும், என்னை போலவே நீயும் இயற்கையின் ஒரு உயர்ந்த மகத்தான படைப்பு என்று, ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? பொறாமை, யுத்தம், தீய செயல்கள் இப்படி இந்த உலகமே அழிந்து கொண்டிருக்கிறதே, சரி தான் எங்களுக்கு பின் வரும் ஜீவ ராசிகளாவது இந்த உலகை மாற்றட்டும் என்று கற்பனை எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கையில் எனது செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது,
பக்கத்து தெரு, வீட்டு முற்றத்தில் ரோஜாச்செடி , இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் துளசிச்செடி, அடுத்த வீட்டு சிறுமியின் குறும்பு, மாமரத்தில் அழகாய் உட்கார்ந்திருக்கும் ஏதோ ஒரு குருவி, காகம் கரையும் சத்தம், தூரத்தில் பஸ் ஹோர்ன், சாலை வழியே சண்டை போட்ட படி நடந்து செல்லும் ஒரு தந்தையும் மகனும், ஓரப்பார்வை பார்த்த படி சென்ற யாரோ ஒருத்தி, அவள் நடை, மோட்டார் பைக் சக்கரங்களுக்கு குறைக்கும் தெரு நாய், வானம், அக்கினி நட்சத்திர வெயில், சூரியனை சுற்றி எத்தனையோ கோள்கள், அதில் எமது கோளில் மட்டும் மனிதம் என்ற ஒன்று, எவ்வளவு பெரிய விஷயம் இது ஒரு மகத்தான யுகம் எங்கள் கோளுக்கு மட்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டும், என்னை போலவே நீயும் இயற்கையின் ஒரு உயர்ந்த மகத்தான படைப்பு என்று, ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? பொறாமை, யுத்தம், தீய செயல்கள் இப்படி இந்த உலகமே அழிந்து கொண்டிருக்கிறதே, சரி தான் எங்களுக்கு பின் வரும் ஜீவ ராசிகளாவது இந்த உலகை மாற்றட்டும் என்று கற்பனை எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கையில் எனது செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது,
.
"ஹலோ" என்று கூறி காதில் வைத்தேன், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பியின் அம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஹார்ட் அட்டாக் (Heart Attack) என்று டாக்டர்கள் சந்தேகப்படுவதாக செய்தி வந்தது.
"ஹலோ" என்று கூறி காதில் வைத்தேன், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பியின் அம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஹார்ட் அட்டாக் (Heart Attack) என்று டாக்டர்கள் சந்தேகப்படுவதாக செய்தி வந்தது.
.
உடனே யோசித்துப்பார்த்தேன், "ஏய் பல்லியே இது தானா நீ எனக்கு கொண்டு வந்த கீர்த்தி?"
உடனே யோசித்துப்பார்த்தேன், "ஏய் பல்லியே இது தானா நீ எனக்கு கொண்டு வந்த கீர்த்தி?"
.
நண்பர்களே இது குறித்த உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்களே இது குறித்த உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நான் உங்களில் ஒருவன்!
- ராம்ராவணா
add to del.icio.us saved by 0 users
“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
ReplyDeleteகளனிப் பானையில விழுகுமாம் துள்ளி“
இது முது மொழி நீங் கேள்விப்பட்டிருப்பீங்கனு நினைக்கிறேன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா...........
நன்றாக சொன்னீர்கள் தோழரே.. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு..
ReplyDeleteஎன் தலைமீது பல்லி விழுந்தது பயமாக உள்ளது.....
ReplyDeleteஎப்படி இருக்கிறீர்கள் எனது தலையிலும் விழுந்தது
Deleteஎப்படி உள்ளீர் சகோ
Deleteஎனது தலையிலும் விழுந்துள்ளது இது உண்மையா?
Deleteஎன் குழந்தையின் தலையில் பல்லி விழுந்து விட்டது....மிகவும் பயமாக உள்ளது....எதும் கெடுதல் நடந்திடுமா???
ReplyDeleteஎனது வலது கை விழுந்து அதாவது எனது வலது கை மணிகடு கு மேல் விழுந்தது அதற்கு என்ன காரணம் சொல்லு nka
ReplyDeleteஇவை பொதுவாக மூட நம்பிக்கை தான்
ReplyDeleteமூட நம்பிக்கை...ஆனால் இறை உண்டு.
ReplyDelete