.
நண்பரே.. ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் வலி உங்கள் எழுத்துகளில் புரிகிறது.. நீங்கள் இருக்கும் இதே மனநிலையில் தான் நானும்.. என்ன எழுதுவது என்றே புரியவில்லை.. செய்தியை நான் கேள்விப்பட்டதும்.. இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையே என்று மனதை தேற்றிக்கொண்டேன்.. ஆனால் செய்தி வெளிவந்ததும்.. அந்த படக்காட்சிகளை கண்டதும்.. இப்போது இதிலே ஏதோ கபடம் இருப்பதாகவே தோன்றுகிறது.. யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று அறிவித்த பின்னர்.. பிறந்ததில் இருந்து சாவுகளை மட்டுமே கண்டும் கேட்டும் இருந்த எனக்கு.. இனி மேல் சாவுகள் குறைந்துவிடும் என்ற உண்மையை சந்தோஷமாக யோசித்தாலும்.. இன்று வரையில் அவை தொடருகின்றன.. என்ன பயன்? கறுப்பு ஜூலை மீண்டும் வந்துவிடுமோ என்று தோன்றியது.. இப்போது அப்படி நடக்காது என்றே தோன்றுகிறது.. காலம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பதில் சொல்லட்டும்.. வெளி நாட்டில் இருக்கும் நண்பர்களே.. தயவு செய்து உங்கள் மன வேதனைகளை கொஞ்சம் அடக்கிவைத்துக்கொள்ளுங்கள்.. நீங்கள் அங்கே கதறும் போது எல்லாம் இங்கே எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியாது.. தேவைப்படும் போது எரிமலையாய் வெடிக்கட்டும்..
.
நல்லவர்களுக்கு ராம்.. தீயவர்களுக்கு ராவணா.. இரண்டும் கலந்த நான் ரம்ராவணா..
add to del.icio.us saved by 0 users
No comments:
Post a Comment