Saturday, May 9, 2009

நிகண்டு

அத்திக்காய் காய் காய்.. ஆழங்காய் வெண்ணிலவே..என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
.
இந்த பாடலின் நேரடியான அர்த்தம் அத்திக்காய் என்ற பழத்தை போலவும் ஆலங்காய் பழத்தை போலவும் நிலவு இருக்கிறது என்பதை போல தோன்றும். ஆனால் உண்மையான அர்த்தம் இதுவல்ல,
அத்திக்காய் = அந்த திக்கில்.. ஆழங்காய் = தூரமாக (என்றும் எடுத்துக்கொள்ளலாம்) என்பதே பொருள்படும்.
.
அதை போல எப்போதோ என் தந்தையிடம் இருந்து ஒரு சித்தர் எழுதிய நிகண்டை கற்றுக்கொண்டேன்.
.
"வெங்காயம் சுக்கானால்..
வெந்தயத்தால் ஆவதென்ன?
மங்காத சீரகத்தை தருவீரேயானால்..
வேண்டேன் பெருங்காயம்..
ஏறகத்துச்செட்டியாரே"
.
நேரடியாக ஏதோ மலிகை சாமான்களை பற்றி யாரோ செட்டியாரிடம் கேட்பதை போல தோன்றினாலும். உண்மையான அர்த்தம் அதுவல்ல. இது,
.
உயிரற்ற உடல் சாம்பலானால்..
எறிந்த உடலால் பயன் என்ன?
அழியாத சீரான உடலை நீ தந்தால்..
இப்போதிருக்கும் இந்த உடல் எனக்கு தேவையில்லை..
முருகா..
.
ஏறகத்துச்செட்டியார் = முருகன் இட்ட ஒரு வேடம் என்று படித்திருக்கின்றேன்.
.
இது தான் பொருள். நிகண்டுகளின் ரசிகன் நான்.
.
உங்களுக்கு தெரிந்த நிகண்டுகள் ஏதேனும் உண்டா?

add to del.icio.us saved by 0 users

2 comments: